கோடை மழையில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து மண் வளத்தைப் பாதுகாக்கலாம் வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் தகவல்
தர்மபுரி, ஏப்.25 கோடை மழையைப் பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மண் வளத்தைப் பாதுகாக்க இயலும் என்று தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பா.ச.சண்முகம், முனைவர் ம.சங்கீதா ஆகியோர் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் விவசாயிகளுக்கு கூறிய ஆலோசனையில்: விவசாயிகள் தற்போது கிடைக்கப்பெற்ற கோடை மழையைப் பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் அடுத்து ஆனி மற்றும் ஆடி மாதங்களில் சாகுபடி செய்யக்கூடிய பயிருக்குத் தேவையான இயற்கை உரங்களை எளிதில் பயிருக்கு அளிப்பதுடன், மண்வளத்தையும் பாதுகாக்க இயலும். தற்போது, தரிசாக உள்ள நிலங்களில் பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பை, தக்கைப்பூண்டு அல்லது பயறு வகைப் பயிர்களை குறிப்பாக காராமணி ஆகியவற்றை ஏக்கருக்கு 20 கிலோ என்றளவில் விதைத்து, பூ பூக்கும் பருவம் வரை வளரவிட்டு, அந்த நிலத்திலேயே மண்ணில் ஈரம் இருக்கும் போது மடக்கி உழுதுவிட வேண்டும். அவ்வாறு செய்வதால் பசுந்தாள் உரப் பயிர்கள் மண்ணில் நுண்ணுயிர்களின் உதவியுடன் சிதைக்கப்பட்டு, அவற்றிலிருந்து ஹீயுமஸ் எனப்படும் மக்குப் பொருள், பேரூட்டங்க