Skip to main content

Posts

Showing posts from May, 2019

கோடை மழையால் நடவு பணியில் விவசாயிகள்

தர்மபுரி, மே 6 கோடை மழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது பயிர்களை நடவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு பருவ மழை ஏமாற்றியதால், விவசாயம் மட்டுமின்றி, குடிநீருக்காகவும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.  கடந்த சில தினங்களுக்கு முன், தர்மபுரி மாவட்டத்தில் கோடை மழை பெய்தது. வழக்கம் போல் இந்தாண்டும், கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவ மழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில், தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், சமீபத்தில் பெய்த கோடை மழையை நம்பி, கோடை உழவு செய்ததுடன், பயிர்களை நடவு செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில், வெப்ப சலனத்தால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், கோடை உழவில் விதைத்த சோளம் உள்ளிட்ட பயிர்கள், தற்போது முளைத்து பசுமையாக உள்ளது.  கடந்தாண்டு போல் இல்லாமல், இந்தாண்டு சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காக்க மட்டுமின்றி, நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் வகையில், பருவமழை பெய்யும் என, விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நம்பிக்கை பிறந்துள்ளது. www