தர்மபுரி, அக். 10 அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூர் சந்தையில், 32 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமைகளில் சந்தை நடக்கிறது. இங்கு நடைபெறும் கால்நடை சந்தைக்கு மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்க வியாபாரிகள் வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த சந்தையில் மாடு ரூ.19,500 முதல் ரூ.51,500 வரையும், ஆடு ரூ.4,800 முதல் ரூ.9,700 வரையும் விற்பனையானது. ழை காலத்தை கருத்தில் கொண்டு, மாடுகள் அதிக அளவில் விற்பனையானதாக கூறிய வியாபாரிகள், மொத்தம் 32 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை ஆனதாக தெரிவித்தனர்.